(Reading time: 1 minute)

காதலின் கண்ணீர் காவியம் - கயல்விழி

கை வளை குலுங்கிட 
 
என் கரம் பற்ற துடித்தவளே 
 
உன் மை விழிப் பார்வையிலே 
 
எனை சிறை பிடிக்க நினைத்தவளே உன்தன் கருங் குழல் நயனத்தினால் எனை உன்னவனாக்க துடித்தவளே இதோ உன்னவன் 
 
உன் காதலை யாசிக்க 
 
நாடி வந்தேன் 
 
அதற்குள் 
 
என்னடி அவசரம் உனக்கு
 
நீ மட்டும் தனியாக
 
காலனுடன் இணைந்தாயே 
 
பேதை பெண்ணே 
 
ஐயோ 
 
உன் சிதை என் முன் எரியுதடி 
 
என் ஜீவனும் 
 
உன்னோடு உடன் கட்டை ஏறுதடி வெற்றுக் கூடாய் நான் இன்று 
 
நம் காதலின் கண்ணீர் காவியம் பாடி நி்ன்றேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.