அவன் ஞாபகம் - அனு.ஆர்
சட்டென விழிப்பு
சரீரத்தில் சோர்வு
நயனங்களில் எரிச்சல்
மனதிலோ வெறுமை
மணி காலை மூன்று
என்றது கடிகாரம்.
இரவுப்பணியில்
இருப்பான்
அவன்.
ஆவலாய்
அலைபேசியில்
அழைத்தேன்.
யாரு?
அழுது
கணத்திருந்தது
குரல்.
அவனது அம்மா!
ஐயோ! நேற்றுதானே
அவன் இறந்துபோனான்!
மரணம்தான்
மறந்து போகிறது
அவன் ஞாபகம்?