போதி மரம் - ஜான்சி
நாளை என்ன நடக்குமோ?
இல்லை வரும் மாதம் என்ன நேருமோ?
வரும் ஆண்டு என்ன கொண்டு வரும் ?
என்னும் அச்சம் , கலக்கம், பயம் அகற்றி
இன்றே வாழ்ந்திடு மானிடா நீ
நாளை என்பது ஒன்றுமில்லை
வரும் மாதம் காண்பாய் எனும் உறுதியில்லை.
வரும் வருடம் குறித்து நிலை கருத்துமில்லை.
உன்னிடம் உள்ளது ஒரு நாள்தான்,
அதுவும் பொன் போன்ற இந்நாள்தான் தான்
என்று நிஜத்தை உணர்த்தும் "மரணமே" நீதான்
எமக்கு ஞானம் தந்திடும் போதி மரம் .