13. காதல் என்பது - ஜான்சி
உயிரை வருத்தும் என் தனிமையும் , துயரமும்,
கழுத்தை இறுக்கும் சங்கிலியாய் தான் மாற,
மூச்சுக் காற்றிற்கு திணரும் வேளையில்,
சட்டென்று தளைகள் அறுபடக் கண்டேன்,
சுதந்திர உணர்வும், சுவாசிக்கக் காற்றுமாய்
அவ்வதிசயம் நிகழ்ந்ததன் காரணம் நான் தேட,
எந்தன் குறை, நிறையோடு ஏற்றுக் கொள்ளும் ஜீவனாய்,
எதிரில் நின்றிருந்தாய் நீ.
இதுதான் காதலா!
{kunena_discuss:779}