(Reading time: 1 minute)

02. எழுந்து வா - ஜான்சி

Keep going

நலனைத் தேடும் நாட்களில்,
நமைத் தேடிவரும் துன்பங்கள்,

இனிமை விரும்பும் வாழ்வினில் ,
கசப்பின் சுவை தரும் சம்பவங்கள்,

கசப்பை விட்டெறிய வழியில்லை,
அதனால் வாழ்வில் சுவையில்லை,

கசப்பை களைய என்செய்வேன் என கலங்கிடும் தோழா,

கசப்பு மருந்து உடலுக்கு நலமாகும்,
கசப்பை விழுங்கிட அஃது 
உள்ளத்தில் உரமாகும்.

விழுங்கிடு,
தகர்த்திடு,

துணிவாய் நீயும் 
எழுந்து வா, எழுந்து வா.

Poem 01

Poem 03

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.