கவிதை - விழித்தெழு - பூரணி ரமேஷ்
மழையோடு நானும் நனைந்தேன்
மனதோடு நானும் கரைந்தேன்
மழை நின்ற வானம் போல
மயங்கி நிற்கின்றேன்!
விழியாலே உன்னைத் தேட
விதியாலே நானோ ஏங்க
விட்டிலிட்ட பூச்சி போல
விழுந்து கிடக்கின்றேன்
கனவிலே நீயும் வந்தாய்
கரை சேர வழியும் சொன்னாய்
கண் திறந்து பார்த்த போது
காணாமல் போனாயே!
முயற்சி தான் செய்யச் சொன்னாய்
முயன்று தான் பார்க்கச் சொன்னாய்
கண்ணீரைத் துடைக்கச் சொன்னாய்
கடவுளை நம்பச் சொன்னாய்!
சொன்னதைச் செய்தேன் நானே
சொர்க்கத்தைக் கண்டேனே
விண்ணிலே பறந்தேன் நானே
விடியலைக் கண்டேனே!
உன்னாலும் முடியும் என்று
உயர்வான எண்ணம் கொண்டு
உறுதியோடு வென்றுவிடு
வெற்றி வாகை சூடி விடு!