கடவுளின் தேசம் - மனோ ரமேஷ்
"கல்லுக்குள் ஈரம்" என்பது வார்த்தையில்
மட்டுமே சாத்தியம் என்றிருந்த
என் எண்ணத்தை நனைத்து அழித்தன
தண்ணீர் கசியும் கேரளத்து பாறைகள்.
மேற்கு தொடர்ச்சி மலை எனும் கடவுளுக்கு
ஏன் இந்த ஓரவஞ்சனை!
மழை வரத்தை இந்த தேசத்துக்கு மட்டும்
வாரி வழங்கி இருக்கிறான் என்ற
மூளையின் கூக்குரலை மறக்கடித்தன
பச்சை போர்த்திய மலைகள் .