அவளின் டைரியில்….. மீரா ராம்
12.ஏனடா என்னை புரிந்து கொள்ள மறுக்கிறாய்?
சில விஷயங்கள் சொன்னாலும் புரிவதில்லை பலருக்கு…
அதுபோல் உனக்கு என் காதலும் ஆகிப் போனதோ?...
என்ன செய்ய ஏது செய்ய ஒன்றும் அறியேன்…
காலமும் என் காதலும் உனை மாற்றும் வல்லமை உடையதா?...
நினைவோடு நிஜமும் சேராதோ???
உன் மனதோடு என்னையும் சேர்க்காதோ???
காதல் பூ எனக்குள் பூத்து குலுங்குகிறது லட்சம் லட்சமாய்…
உனக்குள் அது விதையாய் இருக்கிறதா?
தளிர்விட்டு வளர்ந்திருக்கிறதா?... இல்லை
காய்ந்து போய் விட்டதா?...
ஏதும் தெரியாமல் இருக்கிறேனே….
தெரிய முயற்சித்தும் நீ பதில் சொல்லாமல்
என்னை கொன்று புதைக்கிறாயே நிதமும்…
ரணங்களும் காயங்களும் பரிசளிக்கிறாய்…
சாபமும் சஞ்சலமும் தந்து கொண்டிருக்கிறாய்…
வயதையும் இதயத்தையும் வாட்டுகிறாய்…
எண்ணிலடங்கா நேசத்தை தூர விலக்குகிறாய்…
கருவறையில் உன் உயிரை சுமக்க எண்ணியவளை
கரும் இருளறையில் இன்று தள்ளுகிறாய்….
பாராமுகம், இதன் அர்த்தம் தெரியுமா உனக்கு???
சுடுசொல் கூட நீ சொன்னால் தேன் பாய்ந்தது போல்
உணர்வேனே என்றென்றும்…..
ஏனடா என்னை புரிந்து கொள்ள மறுக்கிறாய்….
{kunena_discuss:784}