உன் இதழ் வார்த்தையை… – மீரா ராம்
வார்த்தைகள்…
உன்னை பொறுத்தவரை அவை வெறும் எழுத்துக்களாக இருக்கலாம்…
ஆனால் எனக்கு அவை நீ என்னுடன் பகிர்ந்து கொள்ளும் ஜீவன்,
நான் பேசும் வார்த்தைகளுக்கு உயிர் இருக்கிறதா இல்லையா
என நான் அறியேன்…
ஆனால், நீ பேசும், சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும்
ஜீவன் உள்ளதாகவே நான் எண்ணுகிறேன் ஒவ்வொரு வேளையும்…
வெளிப்படையாகவே சொல்லுகிறேன்…
உன்னில் நான் கரைகிறேன்…
உன் ஒவ்வொரு செய்கையிலும் என்னை நான் இழக்கிறேன்…
உன் ஓரிரு எழுத்துக்களில் என்னை நான் மறக்கிறேன்…
பொக்கிஷம் எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ
அதுபோல் உன் உதடு உரைக்கும் ஒவ்வொன்றும் எனக்கு….
சொன்னால் நம்பமாட்டாய்…
நீ வெறுமனே சிரிக்கும்போது என்னைத் தொலைத்து
தொலைத்து தேடுகிறேன் உன்னிடத்தில்…
ஆனால் ஏனோ எதையுமே உன்னிடத்தில் நான்
சொல்லிக்கொள்ளவில்லை
தெரியப்படுத்திக்கொள்ள முனையவும் இல்லை…
கோபம் கொள்கிற மாதிரியே வேண்டாத வெறுப்பாகவே நடித்து
நானும் பதில் சொல்லுகிற நேரத்தில்,
உன் ஒற்றை வார்த்தை
என் உயிர் தொட்டு இதயம் நுழையும் மாயம் அறிவாயா கண்ணா நீ???
ஆம்… காதலிக்கிறேன்… உன்னை…
அதைவிட அதிகமாய்
உன் இதழ் வார்த்தையை…
{kunena_discuss:779}