கவிதை - அடுத்து எப்போது - ஷக்தி
விமானங்கள் என்னை
கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,
அங்கே ஒருவித உல்லாசமும்,
"அடுத்து எப்போது" என்ற
ஒரு ஏக்கமும்
என்னை தொட்டு பார்த்தே
கடந்து செல்கிறது!
இதை இரண்டு விதமாக படித்து பார்க்கவும்..
ஒன்று துள்ளி விளையாடும் ஒரு சிறு குழந்தையின் பார்வையில்..
மற்றொன்று வெளிநாடுகளில் பணிபுரியும் ஒரு தொழிலாளியின் பார்வையில்..
அர்த்தங்கள் பலவிதம்..
{kunena_discuss:779}