காலம் தொட்ட நீ...! - ஷக்தி
அடியே,
அந்த சூரியனே சக்தி இழக்கிறது,
உன் பிரகாசமான விழிகளை கண்டு !
அந்த நிலவும் பிரகாசமிழக்கிறது,
உன் ஒளிமயமான முகத்தை கண்டு !
அந்த நட்சத்திரங்களும் ஜொலிக்க மறக்கின்றன,
உன் close up புன்னகையை கண்டு !
இப்படி அந்த விண்ணுலகமே
உனக்கு அடிமையாகும் போது
இந்த மண்ணுலக மைந்தனுக்கு மட்டும்
என்ன விதி விலக்கா....?