(Reading time: 1 - 2 minutes)

முதன் முறை பார்த்த நியாபகம் - மைத்ரேயி

memory

இதயக்கூட்டுக்குள் ஊசி இறங்கிய நொடி

வண்ணம் அற்ற கண்ணீராய் சிந்தியது உத்திர துளி !

 

வேண்டாம் இனி வாழ்வென்று துவண்ட நொடி

எங்கிருந்தோ வந்த நீயே நம்பிக்கையின் துளி !

 

மறைக்க நினைத்த கணங்களை

மரிக்க வைத்தவன் நீ !

 

சிரிக்க மறந்த இதழ்களை

சிலிர்க்க வைத்தவன் நீ !

 

மூடிக்கொண்ட செவிகளுக்கு

மோட்சம் தந்தவன் நீ !

 

துவண்டு விட்ட கரங்களில்

தூரிகை ஆனவன் நீ !

 

தடுமாறிய கால்களுக்கு

தடம் தந்தவன் நீ !

 

என்னையே இழந்தவளாய் நிற்கையில்

தன்னையே தந்தவன் நீ !

 

இன்று ,

பிரிவென்ற பரிசளித்தாய் !

 

மூச்சு இருந்தும் மூர்ச்சையாக வைத்தாய்!

 

இதழ் இருந்தும் இரும்பாய் மாற்றினாய் !

 

கண்கள் இருந்தும் பார்வையை பறித்தாய் !

 

தேகம் இருந்தும் வேகத்தை  கொன்றாய் !

 

மீண்டும் அதே வலி !

 

மறந்த நாட்களில் ஆளுமையில் நான் !

 

இதயத்தின் காயத்தை போக்கிவிட்டு ,

 

மீண்டும் இதயத்தில் அணுகுண்டு வீசினாய் !

 

இதோ வந்துவிட்டது

 

உன்னை , முதன் முறை பார்த்த நியாபகம் !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.