முதன் முறை பார்த்த நியாபகம் - மைத்ரேயி
இதயக்கூட்டுக்குள் ஊசி இறங்கிய நொடி
வண்ணம் அற்ற கண்ணீராய் சிந்தியது உத்திர துளி !
வேண்டாம் இனி வாழ்வென்று துவண்ட நொடி
எங்கிருந்தோ வந்த நீயே நம்பிக்கையின் துளி !
மறைக்க நினைத்த கணங்களை
மரிக்க வைத்தவன் நீ !
சிரிக்க மறந்த இதழ்களை
சிலிர்க்க வைத்தவன் நீ !
மூடிக்கொண்ட செவிகளுக்கு
மோட்சம் தந்தவன் நீ !
துவண்டு விட்ட கரங்களில்
தூரிகை ஆனவன் நீ !
தடுமாறிய கால்களுக்கு
தடம் தந்தவன் நீ !
என்னையே இழந்தவளாய் நிற்கையில்
தன்னையே தந்தவன் நீ !
இன்று ,
பிரிவென்ற பரிசளித்தாய் !
மூச்சு இருந்தும் மூர்ச்சையாக வைத்தாய்!
இதழ் இருந்தும் இரும்பாய் மாற்றினாய் !
கண்கள் இருந்தும் பார்வையை பறித்தாய் !
தேகம் இருந்தும் வேகத்தை கொன்றாய் !
மீண்டும் அதே வலி !
மறந்த நாட்களில் ஆளுமையில் நான் !
இதயத்தின் காயத்தை போக்கிவிட்டு ,
மீண்டும் இதயத்தில் அணுகுண்டு வீசினாய் !
இதோ வந்துவிட்டது
உன்னை , முதன் முறை பார்த்த நியாபகம் !
{kunena_discuss:779}