(Reading time: 1 - 2 minutes)

நான் எழுதுவதாய் இல்லை! - புவனேஸ்வரி 

Pen

மறக்கவில்லை

மறக்க முடிந்த பந்தம் இல்லை

 இருப்பினும் உன்னை நினைப்பதற்கு

 நீ எனது சொந்தமில்லை !

துணிவில்லை

உன் விழிகளை எதிர்கொள்ள துணிவில்லை

 உன் விழிகளில் எனக்கென நேசமில்லை

அதை உணர்ந்தபின் விழி நோக்கிட என்னிடம் துணிவில்லை ..!

 

பொருள் இல்லை ..

 உன்னை நினைவு படுத்த மறுக்கின்ற பொருள்

எனினும் நம் நினைவுகளுக்கும் பொருள் இல்லை

 இதனால் உன்னிடம் நான் மன்றாடினாலும் , அதில் பொருளில்லை ..!

 

எழுதுவதற்கு மொழியில்லை

 மொழி இருந்தாலும் எழுதுவதாய் இல்லை

 எழுத வேண்டியது உணர்வுகள் எனில்

என் உணர்வுகளுக்கு பாஷை இல்லை

மௌனமே மொழியாகிட நான் எழுதுவதாய் இல்லை!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.