(Reading time: 1 minute)

நீக்கமற நிறைந்தவனே - புவனேஸ்வரி 

love

கள்ளத்தனமாக பார்க்கும் உன் விழிகளில்

கல்மிஷமில்லா நேசம்

கல்மனம் போல் நடிப்பவன் நெஞ்சில்

எல்லையில்லா பாசம்

 

போவென்று உன்னிதழ் சொல்ல

வாவென்றழைக்கும் உன் மனம்

ஒவ்வொரு நொடியும் மிளிரும்

உனதன்பு நான் பெற்ற வரம்

 

தூரம் நீ சென்றாலும்

சோர்ந்து போகாத உன் நினைவுகள்

என் நெஞ்சம் எனும் கருவறையை

எட்டி உதைக்கும் குழந்தை

 

காலமே பிரிக்க முயன்றாலும்

களைந்திடுமோ உன் நினைவு ??

என் நெடுந்தூர வாழ்க்கை பயணத்தில்

நீக்கமற நிறைந்தவன் நீ ..!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.