(Reading time: 1 - 2 minutes)

தேவதை! - அமீர்

என் தோள்மீது சாய்ந்தால்
அவளுக்கு இன்பம்.
என் மார்மீது படுத்தால்
அவளுக்கு பேரின்பம்.

என் அணைப்பு
அவளுக்கு ஆனந்தம்.
என் முத்தம்
அவளுக்கு பேரானந்தம்.

என் மடியில் கிடப்பது
அவளுக்கு பிடிக்கும்.
நான் இல்லை என்றால்
அவள் இதயம் துடிக்கும்.

என் பெயர்
அவளுக்கு வேதம்.
என்  நெருக்கம்
அவள் உயிருக்கு நாதம்.

அவள்
எனக்கு பிடித்த ஓவியம்.
அவள்
நான் விரும்பும் கவிதை.

பாலூறும் முகம்
தேனூறும் பேச்சு
கள்ளூறும் பார்வை
கொட்டி வைத்திருக்கும்
இந்தப் பாவைக்கு...

ஒரு சின்ன பா
எழுதவேண்டும்
அவளின்
முதலாம் பிறந்த நாளுக்கு.

ஒரு வரி சொல்லுங்களேன்...
அவளின்
இந்த
அன்புள்ள அப்பாவுக்கு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.