தொலைந்து போ! - ப.இரசல்
கடலென வாழ்வில் வற்றாத நீரை போல்
துளியென ஈரமும் கசியவில்லை என் விழிகளில்!
விடியல் என குரலிட்ட பறவைகள் கூட
என் தூங்காத துயில்களில் வெறும் கூக்குரலே!
இதனை எழுதிய நேரத்திலும்
எழுதி முடித்த நேரத்திலும்
என் நினைவுகளில் வந்து போகும் வார்த்தைகள் "get lost" என்பது தான். உனக்கு புரிந்து கூறினாயா?
இல்லை எனக்கு புரியவைக்க கூறினாயா?
அது உன்னிடம் நான் தொலைந்த பின் புதிதாய் வேறெங்கு தொலைவேன்!