கருப்பு தினம்… - சுந்தர்
இந்திய வரலாற்றில் இன்று மற்றும் ஓர் கருப்பு தினம்….
அறிவால் அந்நியர்களை வென்றாய்…
அன்பால் அகிலத்தையே வென்றாய்….
கனவு காணுங்கள் என்று நீ கண்ட கனவை
நனவாக்கும் வரை ஓயாது எங்கள் மூச்சு…
விருதுகளால் பெருமை அடைந்தவர்களுக்கு மத்தியில்
விருதுகளுக்கு பெருமை அளித்தவன் நீ…..
எதிரிகளை அம்பு கொண்டு வென்றவன் வீரன் என்றால்
அன்பு கொண்டு வென்ற நீ மாவீரன் அன்றோ??
தேசத்திற்காக உழைத்ததில் தேச தந்தையையும்
குழந்தைகளிடத்தில் அன்பு காட்டியதில் நேருவையும்
எளிமையில் என் கர்ம வீரனையும்….
எங்கள் கண் முன் நிறுத்தி…..
இந்த நாட்டுக்காகவே உழைத்த உனக்காக
இந்த நாடே இன்று தலை வணங்குகிறது கணத்த இதயத்துடன்…
ஓய்ந்தது உன் உடல் மட்டும் தானே அன்று உன் உயிர் அல்ல…..
நீ அணு ஆய்வில் வென்ற போது அகிலமே அதிர்ந்தது….
நீ அசைவில்லாமல் சென்ற போது அகிலமே அமைதியானது….
மண்ணில் கடைசி தமிழன் இருக்கும் வரை
நீ உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருப்பாய்….
{kunena_discuss:779}