என் வினோதமானவனே - சரண்யா நடராஜன்
என்னவனே..!
என் வினோதமானவனே..!
என் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்தவனே..
என் இதயத்தை கொள்ளை கொண்டவனே..
என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவனே..
உன் நினைவுகளினாலே என்னை
இடைவிடாது தொல்லை செய்பவனே..
உனக்காக என் இமைகளும் மூட மறுக்கின்றன..
என்னை ஒரு முறை நீ பார்க்க மாட்டாயா என
ஓராயிரம் முறை தவிக்கிறேன்..
உன் அருகாமைக்காக என் மனம் ஏங்குகிறது..
நீ அருகில் வந்தாலோ ஏன் வந்தாய் என தவிக்கிறது..
உன்னிடம் ஒரு வார்த்தையாவது பேச நினைக்கிறது மனது..
உன்னிடம் பேச பல வார்த்தைகளை கோர்க்கிறேன்
உன் கண்களை பார்த்த அந்த நிமிடம் எல்லாவற்றையும் மறக்கிறேன்..
ஊமையாகி போகிறேன்..
காரணம் புரியவில்லை எனக்கு..
உன்னை பற்றி எல்லாவற்றையும் நான் அறிவேன்..!
என் பெயரையாவது நீ அறிவாயா..?
உன்னால் தூக்கி எறியப்படும்
குப்பைகள் எல்லாம்
என் வீட்டின் பொக்கிஷங்கள்..!
தூக்கத்திலும் உன் பெயரை தான் உளறுகிறேன்..
விழித்திருக்கும் நேரத்திலும் உன் பெயரை தான் ஜபிக்கிறேன்..
பார்த்தவுடன் வருவதற்கு பெயர் எல்லாம் காதல் இல்லை
என்றவள் தான் நான்....!
ஆனால் உன்னை பார்த்த அன்று உன் கண்களில் விழுந்தவள் தான்..
இன்று வரை எழவில்லை..
அது என்ன கண்களா இல்லை காந்தமா....?
இதற்கு பெயர் தான் காதலா....?
இல்லை இது ஜென்ம ஜென்மமாக தொடரும் பந்தமா......?
இந்த உணர்வு உனக்கும் தோன்றுமா...?
இல்லை எனக்கு மட்டும் வரமாய் வந்த சாபமா....?
- என்றென்றும் உன்னை தொடரும் உன் ப்ரியமானவள்
{kunena_discuss:779}