(Reading time: 1 - 2 minutes)

அன்று... இன்று... - சந்தியா

andru... indru...

அன்று.....

கண்ணீர் சிந்தியபடி

உன்னை 

காதலிக்கிறேனடா 

என்றாய் நீ.....

துளியும் வருந்தாமல்

உதாசினம் செய்தேன்

 

இன்று.....

உன் காதலை 

உணர்ந்த தருணம் 

சொல்ல ஓடி வந்தேன் 

உன்னை காண....

உன்னை கண்டுக்கொண்டும்

விட்டேன்....

என் காதலையும் உன்னிடம்

சொல்லியும் விட்டேனடி....

என் கண்ணீராக

உன் கல்லரையில்....!

காலம் யாருக்காகவும் காத்திருக்காது. உன்னை விரும்பி வருவதை ஏற்றுக்கொள். வாழ்க்கை என்பது சிறியது அது உன் வாழ்நாட்கள் பொருத்தே அமையும். உன் வாழ்நாட்கள் முடியும் முன்பே உன் அன்பையும் பிறர் அன்பையும் புரிந்து ஏற்றுக்கொண்டு வாழ பழகு .

என்ன இவ்வளவு சிறிய கவிதைக்கு இவ்வளவு பெரிய advice சானு நினைகிறிங்க புரியுது பட் இது ஒரு உண்மை சம்பவம் . என் தோழியின் மற்றும் என் தோழனின்  கதைதான் . கதையாக எழுத நினைத்தேன் நேரம் போதவில்லை அதனால் தான் கவிதையாக எழுதினேன் இது கவிதையா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் என் மனதில் உள்ள உணர்வை மட்டுமே வெளிபடுதிவுள்ளேன். இன்றோடு அவள் இறந்து ஒரு வருடமாகிறது. இன்று அவளின் நினைவு நாள் . அவளின் நினைவை இந்த  சில்சீ தலத்தில் உள்ள என் friends கூட பகிர்ந்துக்கொள்ள எண்ணினேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.