என்னவனே - கிருத்திகா
அந்தி சாயும் வேளை ..
பூங்காவில் அமருவது
எனக்கு பிடித்தமான ஒன்று
அங்கே நான் கண்ட ஒன்று
இந்த சிந்தனையை தூண்டியது
சில பறவைகள்
பறப்பதை விட
பூங்காவின் இருக்கைகளில்
எச்சங்கள் போடவே
துடிக்கின்றன.
அங்கே திரியும்
மனங்களின் எச்சிலை விட
இவ்வெச்சங்கள் ஒன்றும் நாற்றமில்லை
என நினைப்பதாலோ
இல்லை
அவர்களின் வீட்டிற்குள்
அனுமதி இன்றி நுழைந்த
நம் மீது உள்ள கோபத்தினாலா
{kunena_discuss:779}