(Reading time: 1 - 2 minutes)

சமுகமே சாதியோ???  - கவிதாசன்

Blood drop

பிறக்கையிலே என் பெற்றோர் பாலினம் கண்டனர்;

என் சுற்றத்தார் சாதியிலே ஒன்றை சேர்த்துகொண்டனர்;

வளர்கையில் இனம் அடையாலம் சொல்லப்பட்டது;

சமூகமோ அதை வர்ணமாய் என் மீது பூசிவிட்டது...

 

பள்ளியிலே இணைகையில் விண்ணப்பம் தந்தார்;

சாதி அடையலாம் அழுத்தமாய் எழுத சொன்னார்;

கற்பிக்கும் பாடம் சாதி இல்லை- ஆசிரியர் 

உறைவிடம் சென்றால் உண்மை ஒன்றே..

 

அம்பேத்கர் காலனி வழியே சென்று, 

நாய்கர் தெருவில் நுழைந்து.

தேவர் வீதியெல்லாம் சுற்றி,

வண்ணானிடம் துனி கொடுத்து,

சென்றுவிட்டேன் பள்ளிக்கு... ஆசிரியர் சொன்னார் 

சாதி இல்லையடி பாப்பா....

 

காதல் கொள்கையில் சாதி உண்டோ?

மனிதரை கொன்று சாதியை வளர்பதோ??

இத்தனையும் பார்க்கிறோம், மாற்றம் இன்றி வளர்கிறோம்.

பள்ளியிலே புத்தகம் திறந்தால்- முதல் பக்கம் 

சாதி இல்லையடி பாப்பா... இதை 

சாதி இல்லையட மனிதா  என்பேன் நான்.... 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.