மனிதன் -- மணிதான் - மாது
மனிதா உனது
மாதா, பிதா .............
மனமறி முதற்கடவுள்
மனையே கோவில்
மனைவியே அகில அக்க்ஷயம்
மக்களே செல்வங்கள்
மனிதா நீ
மண், பொன் மற்றும்
போதை தரும் பொருள்மேல்
பேராசை தவிர் --, நற்
பெயரோடு வாழ்வா யன்றோ
பெயர்கெட்டு வீழ்வாய்
மனிதா நாளும்
மதம், ஜாதி, மொழிகளின்
சுமை தாங்கி யானாய்
மனம், நீதி, நேர்வழி கண்டு
மதி தவறாமல் நெறியோடு
வாழ்வின் விடியல் காண்பாய்
மனிதா என்றும்
உண்மையை உரைத்து
உழைப்பால் உயர்ந்து
உரைகல்லென வாழ்ந்தால்
உலகம் உன்னை வாழ்த்திடுமே
உன்பிறப்பை போற்றிடுமே !!!
{kunena_discuss:779}