பெரிதல்ல!! - கவிதா கல்யாணசுந்தரம்
தோற்றம் பெரிதல்ல,தோற்றுப் போகும் மனதின் எண்ணத் தோன்றுதலால்.
வாழ்த்துப் பெரிதல்ல,வாசித்த போதும் வானுயர்ந்து செல்லும் பறவைக்கு.
வலிகள் பெரிதல்ல, வீழ்ச்சியுற்ற போதும் துணிந்தெழுந்து மீண்டும் முயற்சித்தால்.
வசந்தங்கள் பல உண்டு, சுற்றிலும் காணாத போதும், உன்னை நீ கண்டுணர்ந்தால்.
{kunena_discuss:779}