ரங்கோலி - கல்பனா
அழகாய் ரங்கோலி முடித்து
நிமிர்ந்து சரி பார்க்கையில்
உனக்குப் போட தெரியுமா
ஒரு புள்ளி ஒரு வரிசை கோலம்
அண்ணணின் குரல் காதில்
கீழே ஒரு புள்ளியிட்டு
அதைச் சுற்றி வட்டமிட்ட ஞாபகம்
எனக்குள்ளே சிரித்துக் கொண்டேன்
காலங்கார்த்தல தெருவில நின்னு
தனியா சிரிக்குது பாரு
கணவனின் குரல் நிஜத்தில்
சிலருக்கு சில பொக்கிஷம்
சிலருக்கு அவை குப்பைகள்.
வாழ்க்கையும் ரங்கோலி தான்
ஒரே கோலத்தில் இருந்தாலும்
சில கோடுகள் ஒன்றுக்கொன்று எதிராய்.