(Reading time: 1 - 2 minutes)

என் காதலா... - கல்பனா

woman

என்னை அழைத்த உன் இதழ்கள்

வேறொருத்தியின் பெயரை அழைத்ததா ?

என்னை ரசித்த உன் விழிகள்

வேறொருத்தியை பார்த்ததா ?

என் குரல் கேட்ட உன் செவிகளில்

வேறொருத்தியின் குரலா ?

என்னை தொட்டு விளையாடிய உன் விரல்களில்

இன்னொரு கணையாழியா ?

என் விரல் தொட்டு கலைத்த உன் சிகையில்

வேறொருத்தியின் விரல்களா ?

நான் குடியிருந்த உன் இதயத்தில்

வேறொருத்தியா ?

கோயிலை சத்திரமாக்கினாயடா…

இப்பொழுது பிரிந்து

மீண்டும் மகளாய் வருவேன் என்று நினைத்தாயோ ?

மனைவியாய் வருவேன்

 

இல்லையெனில்...................

உனக்கு மரணமாய் வருவேன்.

நீ என் காதலன் அல்ல

பெண் குலத்தின் கயவன்.

நான் நளாயினி அல்ல

உன்னை வேசி வீட்டிற்கு சுமந்து செல்ல

கண்ணகி அல்ல உனக்கு பதிலாக

மதுரையை எரிப்பதற்கு

எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால்

உன்னை தூக்கில் இடுவேன்

இல்லையெனில் சுட்டிருப்பேன்

ஆனாலும் விட மனமில்லை உன்னை

பெரியதொரு ஆயுதம் கையிலெடுத்தேன்

அது.....................மன்னிப்பு

நான் வீழ்ந்தும் வாழ்கிறேன்

நீ வாழ்ந்தாலும் மரித்தவனே.

 

மன்னிக்கவும் புவனேஸ்வரி மேடம். உங்க கவிதை படித்தபொழுது எனக்கு தோன்றிய இணை கவிதை இது. தவறெனில் பிழையை மன்னிக்கவும்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.