முதல் நாள் இன்று – ஸ்ரீவள்ளி
விழியோடு விழி மோதும் முழக்கம் கேட்டு மேகம் மண் மீது படையெடுக்க;
இங்கே கொட்டும் மழையில்
நீயும் நானும் மட்டும் ...
10 அடி தூரத்தில் கல்லூரி நுழைவாயில்..
புவியீர்ப்புவிசை வென்ற
உன் விழியீர்ப்பு விசையில் ,
சிக்கி சிற்றடிகள் வைத்தேன்.....
உன் அறையடி கூந்நலில் தான் எத்தனை வசீகரம்......
வானத்து தேவதைகளும் தோற்றுப்போகும்,
இந்த ஆண்சிலையின் முன்........
தேவதைக்கு ஆண்பால் இல்லாமல் போனது ஏன்???
கல்லூரி முதல்நாள் முடிந்தும்,
இதயம் பரிகொடுத்த
பரிதவிப்புகள் எனக்குள்...
ஓராயிரம் முறை
வாழ்ந்துவிட்டேன் உன்னுடன் ,
இந்த ஒரு இரவில் மட்டும்.....
கனவுகள் களைந்தது,
விடியலும் தான் வந்தது...
காலை பேருந்து கூட்டத்தில் மறைந்த உன்னிடம் மனம் அணிச்சையாய் பேசியது,
"நேற்று நீயும் என்னை போல் நம் நினைவுகளில் முடங்கி கிடந்தாயா???"
{kunena_discuss:779}