நீ வருவாய் என - விமலா தேவி
காட்சியாய் இருந்த நீ
என் பார்வையாகி போனாய்...
காற்றாய் இருந்த நீ
சுவாசமாகிப் போனாய்.,
ஒலியாய் இருந்ந நீ
என் பேச்சாகிப் போனாய்...
யாரோவாக இருந்த நீ
எல்லாம் ஆகிப் போனாய்..
எல்லாமும் ஆகிய பின்
இதயத்தில் வலியும்
கண்ணில் நீரும்
சிந்தனையில் தேடலும் தந்து
ஏனோ என்னை நீங்கிப் போனாய்...
திரும்பி நீ வரும் நாளுக்காக??
ஒளி இல்லா கண்களுடனும்..
பாடல் இல்லா மௌனங்களுடனும்..
துடிக்க மறந்து கதறும்
இதயத்தோடும்..
காத்திருக்கின்றேன் நான்...!!!!!!
{kunena_discuss:779}