(Reading time: 1 - 2 minutes)

யாரு கிட்ட!?!? – ஷாஃப்ரின்

question

குற்றமாம் குற்றம்…

நான் என் செய்தேன் பழிகூற?

தவம் புரிந்தது தம் குற்றமா?

தயை காட்டியது என் குற்றமா?,

ஏரி வழங்கியது என் குற்றமா?

ஒரு ஏரியாவையும் விடாமல் வீட்டை கட்டியது தம் குற்றமா?,

முன்னேற்பாடு செய்யாதது தம் குற்றமா?

நேரத்திற்கு வேலை செய்வது என் குற்றமா?,

ஏரிக்கு லாரி விடாதது தம் குற்றமா?

காலம் மாறியபின் மாரி பெய்வித்தது என் குற்றமா?,

மழையை மளலையிலிருந்து விரும்பியது தம் குற்றமா?

அன்பில் அதிகம் தந்ததுதான் என் குற்றமா?,

செய்வதெல்லாம் தாம், திட்டுவதோ என்னை!!

கொடுத்தாலும் தவறு! எடுத்தாலும் தவறு…!

தத்தளிக்கும் தமிழ்நாட்டை பார்த்துக் கேட்டாராம்

-கடவுள்!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.