நண்பன் - கார்த்திகேயன் பிச்சை
தாய் உயிர் கொடுத்தாள்
தந்தை அறிவைக் கொடுத்தார் ....
நண்பா நீ மட்டும் தான்
இவ்வுலகில் எனக்கு முகவரி கொடுத்தாய் ....
ஆம் இந்த வேலையில்லா பட்டதாரியை
வேலையுள்ள பட்டதாரி ஆக்கினாய் ....
தாயிடமும் நண்பனிடமும் மட்டுமே
பகிர்ந்துக் கொண்ட வார்த்தை
பசிக்குது என்று ....
வேரில்லா மரங்கள் இல்லை
நல்ல நண்பனில்லா மனிதனில்லை ....
தாயில்லாமல் குழந்தை பிறப்பது இல்லை
அது நட்பை சுவாசிக்காமல் இறப்பது இல்லை ....
வரவு செலவு இல்லா வாழ்க்கை இல்லை
நம் நட்பில் வரவு மட்டுமே, செலவேயில்லை .....
துன்பம் என்றால் நாம் முதலில் அழைப்பது
கடவுளை அல்ல நம் நண்பனைத்தான் ....
இவ்வுலகில் காசில்லாமல் எதுவும் கிடைப்பதில்லை
நல்ல நட்பை தவிர ....
என் மீது எனக்கே நம்பிக்கையில்லாத போதும்
என் மீது நம்பிக்கை வைத்தவன் நீ ....
மாற்றம் மட்டுமே மாறாதது என்பார்கள்
அது தவறு என்று உன் நட்பை சுவாசித்ததும்
உணர்ந்து கொண்டேன், ஆம் உன் நட்பும் மாறாதது என்று.....
நண்பா இறைவனுக்கும் ஒருப்படி மேல் நீ ,
ஆம் தவறு செய்தால் கடவுள் கூட தண்டிப்பார்,
ஆனால் நீ மட்டுமே மறுமுறை தவறு செய்ய விடாமல் தடுப்பாய் .....
நட்பு என்பது வேறொன்றுமில்லை
பல தாய் வயிற்றில் பிறந்த ஒர் குழந்தை .....
{kunena_discuss:779}