பெரு மழை - நித்யா
சில்லென்ற மாலை நேரம்
சிதறிக் கிடக்கும் சிறு பூக்கள் நசுங்காமல்..
மெல்ல ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில்..
காதோடு கதைகள் பேசியபடி
காற்றாய் உன் நினைவுகளும்..
மெல்ல மாறிய மேகக் கூட்டத்தில்..
சிறு சாரல் மழையாய் நீ பெய்யத் தொடங்க...
உன்னுள்ளே தாவிடத் துடிக்கும்
சிறு குழந்தையாய் மாறி..
சிறகாய் இரு கைகள் விாித்து் ஆனந்தமாய் நனையத் துவங்கினேன்..
சட்டென்று பெரு மழையாய் மாறி
முற்றிலும் என்னை உள்ளிழுக்கத் தொடங்கினாய்..!!
{kunena_discuss:779}