(Reading time: 1 - 2 minutes)

கவிதை - சிறகுகள் - முஹம்மது காசிம்

bird

கஷ்டத்தில் சிக்கியவுடன்

சருகாகி விட்டோம்

என்று எண்ணி விடாதே !

பறவைகள்

ஒடிந்த சிறகை வைத்து தான்

பறக்க முயற்சிக்கிறது !

 

பல இடங்களில் முட்டி மோதியும்

வாய்ப்புகள் கிடைக்கவில்லையே

என்று மனம் ஒடிந்து விடாதே !

காற்றில் பறக்கும் சிறகுகள்

ஒரிடத்தில் நிலையாக நிற்ப்பதற்க்கே

அலை மோதுகின்றது !

 

முன்னேறும் போது

"எல்லோரும் ஏளனமாக பார்க்கின்றார்கள்"

என்றுஎண்ணிவிடாதே!

சிறகுகள் மேலே

செல்லும் போது தான்

பலர் வியப்பாக பார்க்கிறார்கள் !

 

 

 

அடுத்தவர்களின் கைகளை

நம்பி  இராதே !

தன்னம்பிக்கையில் தான்

வாழ்க்கை இருக்கின்றது !

 

கிளைகளை நம்பி

பறவைகள் அமர்வதில்லை !

சிறகுகளின்  நம்பிக்கையிலேயே

பறவைகள் வாழ்கிறது !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.