(Reading time: 2 - 3 minutes)

கவிதை - உன்னோடு இருந்த நாட்கள் - முஹம்மது அபூதாஹிர்

couple

அன்பே

பூக்கள் எதுவும் பேசியதில்லை

உன்னைத் தவிர !

 

அருகில்

பலர் இருந்தாலும் தனிமையையே உணர்கிறேன்

நீ இங்கே என்னுடன் இல்லாததால் !

 

முள்ளாய் குத்திய

என் வாழ்க்கைப் பாதையில்

அழகியப் பூவாய் வந்தவள் நீ !

 

புயலடித்த

என் வாழ்க்கையில்

ஒதுங்க அமைதித் தீவாய் வந்தவள் நீ !

 

உன்னுடன் இருந்த

நாட்கள் எல்லாம்

என் கண்ணுடன் இருக்கிறது!

 

நீ என்னுடன்

தினமும் இருப்பது போல

எனக்கு கனவுகள்  வருகிறது !

 

நிலவே இறங்கி

நிலத்தில் என்னுடன்

நடந்து வந்தது !

அது பெண்ணாக

பூமியில் பிறந்து வந்தது !

 

நீ அன்பென்னும்

அலை கடலின்  தண்ணீர் !

நீ என்னை கைப்பிடித்த நாள்

எனக்கு வந்தது ஆனந்தக்கண்ணீர்!

 

வானவில் தோன்றியப் பக்கம்

உனது வண்ணமுகம் பார்த்தேன் !

தென்றல் வீசிய திசையில்

உனது காலடி ஓசைக் கேட்டேன்

 

ரோசா மலர் சிரிக்க

தண்ணீர் துளிகள் தெறித்தது

கடும் உரைப்பனி வீசிய நேரத்தில்!

பாச மலர் நீ சிரிக்க

உன் ஆனந்தக்கண்ணீர் தெறித்தது என் மேல்

உன்னுடன் பேசிய நேரத்தில் ! 

 

ஆழிய கடலின்

அலைகளின் மொழியை

உன்னுடன் அளவளாவியப் பின்

நான் அறிந்தேன்!

அகராதியில் படித்த

வார்த்தைகள் அனைத்தையும்

உன்னைப் பார்த்தப்பின்

நான் மறந்தேன்! 

 

மலர்கள் அனைத்தும்

உன்னை அடைய யுத்தம் செய்து

ரத்தம் வந்தது !

வாள்கள் எல்லாம்

உன்னை நெருங்க முனைய

முனைகள் உடைந்து

வாசனை வந்தது! 

 

முடிந்த தேதிகளை

நான் கிழித்தப் பின்பும்

உன்னுடன் கழித்த நாட்கள் மட்டும்

என்னிடமே திரும்பி வந்தது !

எதிர்வரும் நாட்களோ

உன்னை வரவேற்ப்பதற்காக

என்னிடமே விரும்பி வந்தது !

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.