(Reading time: 1 - 2 minutes)

தாயின் தவிப்பு - சிவரஞ்சனி 

 boy

நீ  என் வயிற்றில் வளர்கையில்,
  என் வலிகள் தளர்ந்தன!

உன்னைப் பிரசவித்த போது,
  பிரபஞ்சமே வசமானது போன்ற 
   பிரமை எனக்கு!

உன் உறக்கச் சிரிப்பில், 
உலகமே சிரிப்பதாய்த் தோன்றியது!

நீ கவிழ்ந்து, தலை தூக்கிப் பார்க்கையில்,
என் கவலைகள் தலை கவிழ்ந்து நின்றன!

நீ தவழ்ந்து வருகையில்,என் தவிப்புகள் துவண்டன!  

நீ எழுந்து நிற்கையில்,என் ஏக்கங்கள் சரிந்தன!

நீ தத்தி தத்தி நடக்கையில் ,என் துயரங்கள் தலை தெரிக்க ஓடின!

நீ அம்மா என்றழைக்கையில்,இந்த அகிலமே எனக்கு அடிமையானது போன்ற ஆனந்த ஆணவம் எனக்கு!

உன் குழலினும் இனிய மழலை எனும் இசையில்,என் இதய இரைச்சல்கள் இடிந்து நொறுங்கின!

உன் பிஞ்சுக் கைகளில் எனக்கு உணவு ஊட்டுகையில்,என் உள்ளம் உருகி,விழிகளில் வழிகிறது!

உன் பஞ்சு இதழ் முத்தம்,எனக்கு மூவுலகினையம், மும்மூர்த்திகளையும் காட்டுகிறது!

உன் ஒவ்வொரு செயலும் தரும் சிலிர்ப்பு,என் ஒவ்வொரு அணுவிலும் நிறைகிறது!

என் துன்பங்களில் துணை நின்றவனே!
நாளை நீ பள்ளி செல்லப் போகிறாய்,தனிமையை எனக்கு துணையாக்கிவிட்டு!

இனி நீ இல்லம் வரும் வரை,உன் நினைவுகளும்,நிழற்படங்களுமே துணை எனக்கு!!!  

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.