(Reading time: 1 minute)

யாருக்கு திருமணமோ? - சிவரஞ்சனி 

Rain

யாருக்கு திருமணமோ?

விண்ணிலிந்து மண் வரை

தோரண விளக்கு

போடப்பட்டுள்ளது!(மின்னல்)

மேள தாள ஓசை

பூமியைப் பிளக்கிறது!(இடி)

ஆனந்தக் கண்ணீரில்

நனைந்ததில்

மண் மணக்கிறது!(மழை)

மரங்கள் சாமரம் வீசுகின்றன!

கரு மேகங்கள்

குடை பிடித்துள்ளன!

ஒருவேளை,

ஆதவனும்,நிலாப்பெண்ணுமே

மணமக்களா?

நாணத்தில்

ஒளிந்து கொண்டனரோ?!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.