காதல் மொழி பேசிடுமோ..!! - சித்ரா. வெ
காலை முதல்
என் நேரங்கள் நீண்டன
என் அலங்காரத்தில்...
நான் தேடியதில் அடுக்கி வைத்த
ஆடைகள் கலைந்தன
என் அலமாரியில்...
எல்லாம் உன் ஒரு பார்வைக்காக...
என் எதிர்பார்ப்புகள் நீங்காமல்
நீ பார்த்த அந்த ஒரு பார்வையை...
என் ஓரப்பார்வை சந்தித்தது...
என் ஒரு நேர் பார்வைக்காக
நீ ஏங்கும் உன் எதிர்பார்ப்பும்..
எனக்கு புரிந்தது...
இருந்தும் உன் பார்வையை சந்திக்க
என் விழிகள் தயங்குவதும் ஏனோ??
கண்ணும் கண்ணும் கலந்தால்
காதல் மொழி பேசிடுமோ!!
என்ற அச்சத்தில் தானோ??
இது என்னுடைய முதல் முயற்சி அதனால் பிழை இருந்தால் மன்னிக்கவும்
{kunena_discuss:779}