வேதனை தரும் வெறுமை - வின்னி
என்னால்அதை மாற்ற முடியாது,
அது இயலாதது
காலம் கடந்துவிட்டது…..
எனக்கு நம்பிக்கை இருந்தது
எப்போதும் நம்பிக்கை,
தொடர்ந்தும் நம்பிக்கையுடன் இருந்தேன்
அது எனது பிழையா?
என்னைக் குற்றம் சாட்ட முடியுமா?
இதைவிட கொடுமை வேறொன்றும்
எனக்குத் தேவை இல்லை
அது எனது பிழையா?
வேதனையை விளக்க முடியாது
வேறு ஒருவரும் அதை உணரவோ
அல்லது புரிந்து கொள்ளவோ முடியாது
ஆனால், அது அங்கே இருக்கிறது
ஒவ்வொரு நாளும், தொடர்கிறது
ஒவ்வொரு மணித்தியாலங்களும்,
ஒவ்வொரு நிமிடங்களும்,
அந்த வேதனை சொல்வது 'வெறுமையை '
கைகளில் வெறுமை
தழுவுவதற்கு ஒன்றுமில்லை
நெஞ்சில் அணைப்பதற்கு,
குழந்தை இல்லை
விளையாட ப் பிள்ளை இல்லை
அது ஆழமானது
ஒவ்வொரு நாளும், வேதனை தருவது
அது ஒவ்வொரு நாளும் தொடர்கிறது
தொடர்ந்து கொண்டே போகிறது
அதன் வேதனையை
ஒருவருக்கும் புரியவில்லை, எனது வெறுமை
{kunena_discuss:779}