மறு பிறப்பு இல்லை - வின்னி
மரணத்திற்கு பின் வாழ்க்கை இல்லை
சொர்க்கம், நரகம் என்று இல்லை
இறந்த பின் நடப்பதைச் சொல்லச் சாட்சிகள் இல்லை
நமக்கு இரண்டு உடல்கள் இல்லை
நமக்குத் தெரிந்தது இந்த பூத உடல் உன்றுதான்
கண்ணுக்குப் புலப்படாத சூட்சம உடல் இல்லை
இறந்த பின் நாம் வேறு ஏதோ உலகுக்குப் பயணிப்பது இல்லை
நன்மைக்கு சொர்க்கம் இல்லை
தீமைக்கு நரகம் இல்லை
எல்லாம் கட்டுக் கதைதான், உண்மை இல்லை
மூளை செயலிழந்து விட்டால் பிறகு எதுவுமே இல்லை
மரணத்திற்கு பின் வாழ்க்கை இல்லை
மறு பிறவி என்பதோ இல்லை
சொர்க்கம்-நரகம் என்பது இல்லை
அவை மரண பயத்தைப் போக்க புகுத்தப்பட்ட கதைகள்
ஹிந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய, புத்த மதங்கள்
நினைத்தபடி மரண பயத்தை அவை நீக்க இல்லை.
எனக்கு மரண பயம் சுத்தமாக இல்லை
மரணிக்க நான் அவசரப்படவும் இல்லை
நான் நிறைய சாதிக்க இல்லை
பல விஷயங்களை நான் கற்றுக் கொள்ளவே இல்லை
நான் வாழ்நாள் முழுவதும் மரணத்தை ஏமாற்றினேன்! இல்லை
என்று சொல்லவே இல்லை
ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். ‘ஸ்டீபன் ஹோக்கிங் ‘ சொல்வது பொய் இல்லை
மரணத்திற்குப் பின் வாழ்க்கை இல்லை
மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே.
அது செயலிழந்து விட்டால், அனைத்தும் இல்லை
மரணம்தான் இறுதியானது, அது கற்பனை இல்லை
அது விஞ்ஞான ஆராய்ச்சி. கட்டுக்கதை இல்லை,
அது நாகரிகமடைந்த சமுதாய அறிவு, ‘ஸ்டீபன் ஹோக்கிங் ‘
போன்ற மேதைகள்சொன்னது நான் சொல்வது இல்லை.
“மூளைக்கும் இதயத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்ப்படும்போது உனது இதயத்தையே நம்பு”- இது சுவாமி விவேகானந்தர் சொன்னது.
{kunena_discuss:779}