(Reading time: 1 - 2 minutes)

மழைத் துளிகளுக்கும் எனக்கும் இருக்கும் நட்பு - ஷர்மி

Rain

உலக நியதிப் படி,

கடவுளின் சொற்களுக்கு இணங்க,

வானில் இருந்து

மண்ணை மட்டுமே நோக்கி,

செல்ல வேண்டும் என்பது அவளுக்கு விதிக்கப்பட்ட விதி,

                எனினும் என் மீது அவள் கொண்ட காதலினால்……

மண்ணைத் தொடும் முன்பு, வழியில்,

என்னைத் தொட்டு, உரசிச் செல்வாள்……

என்னை விட்டு விலகும் துயரம் தாங்காமல்,

                அவள் அழுகையின் சுவடாக,

வெள்ள ஆறாக பெருக்கெடுத்து ஓடுவாள்………

                  இறுதியாக, பிறந்த இடத்தைச் சேர்ந்து……..

காத்திருப்பாள்,

நான் அவளுடன் விளையாட வருவேன் என்று………….

என்றும் என்னை விட்டு நீங்காத என் உயிர் தோழி “மழைத் துளிகள்”…..

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.