காதல் சாரல்! - த.இந்துஜா
உன்னிடம் பேசும் நாட்களில் உன்னை
நினைப்பதை விட பேசா நாட்களில் தான் அதிகம்
உன்னிடம் திரும்ப பேச
ஆரம்பித்தவுடன் எதற்காக சண்டை போட்டேன் என வருந்துகிறேன்
வருத்தத்தை அறிந்ததினாலோ என்னவோ நீ
வழக்கத்தை காட்டிலும் அன்பை கொட்டுகிறாய்
அந்த அன்பெனும் மழையில் குழந்தையாய்
நனைய ஆசைபடுகிறேன்
இருப்பினும் அவற்றால் எனக்கு தீமை
நேருமோ என அஞ்சுகின்றனர் எம் பெற்றோர்கள்
அவர்களும் அறிவர் அம்மழையின் மகத்துவத்தை
ஆனால் எனக்கு அது சரிதானோ என தீர்வில்லை
தெளிய வைக்க என்னிடமோ வழியுமில்லை
இதெல்லாம் அறியாத அம்மழை அதுவே
தீர்வெழுதியது அவள் எனை மறந்தாள் என்று......
{kunena_discuss:779}