(Reading time: 1 - 2 minutes)

காதல் சாரல்! - த.இந்துஜா

Love

உன்னிடம் பேசும் நாட்களில் உன்னை

நினைப்பதை விட பேசா நாட்களில் தான் அதிகம்

உன்னிடம் திரும்ப பேச

ஆரம்பித்தவுடன் எதற்காக சண்டை போட்டேன் என வருந்துகிறேன்

வருத்தத்தை அறிந்ததினாலோ என்னவோ நீ

வழக்கத்தை காட்டிலும் அன்பை கொட்டுகிறாய்

அந்த அன்பெனும் மழையில் குழந்தையாய்

நனைய ஆசைபடுகிறேன்

இருப்பினும் அவற்றால் எனக்கு தீமை

நேருமோ என அஞ்சுகின்றனர் எம் பெற்றோர்கள்

அவர்களும் அறிவர் அம்மழையின் மகத்துவத்தை

ஆனால் எனக்கு அது சரிதானோ என தீர்வில்லை

தெளிய வைக்க என்னிடமோ வழியுமில்லை
இதெல்லாம் அறியாத அம்மழை அதுவே

தீர்வெழுதியது அவள் எனை மறந்தாள் என்று......

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.