மௌன மொழி!!! - -த.ராமிஷா
வாயிருந்தும் பேச முடியவில்லை
பேச முயன்றும் வார்த்தை வெளிவரவில்லை…
தூர நிற்பவரிடம்
சைகையால் உரையாடுவது போல
அருகில் உள்ளவரிடமும்
உரையாட வேண்டிய நிலை…
கண்ணால் பேசி
காதல் வளர்ப்பவர் நடுவே
என் கருத்தை பகிர
கண்களை உபயோகிக்கின்றேன்...
எனக்கு “தன்யா” என்று
பெற்றவர் சூட்டிய
அழகிய பெயர்
“ஊமை, சிறப்பு குழந்தை...” என்று
மற்றோரால் மாற்றி அழைக்கப்பட்டது…
ஐயோ பாவம்! என்ற
அனுதாப வார்த்தையை
நான் விரும்பியதில்லை....
என் விருப்பு வெறுப்புகளை
மௌனமாய்
படைத்தவனிடம் சமர்ப்பித்தவாறு
சாதிக்கவே விரும்புகிறேன்-
சரித்திரம் படைத்திட!!!
{kunena_discuss:779}