(Reading time: 2 - 3 minutes)

கவிதை - அவன் யாரோ யாரோ தெரியாதே..!! - டோனா

Father - daughter

இதுவரை சிலிர்க்காத
என் மனமும்
சிலிர்த்திட்டதே..
என் கையில் இருக்கும்
பிஞ்சு குவியலின் குட்டி விரல்கள்
என் முகத்தில் மோதிடுகையில்..

முட்டை கண்களால் பார்த்து,,
பொக்கை வாயால் சிரித்து,,
கைகளால் என் முகத்தை 
தடவுகையில்,,
குத்தாட்டம் போட்டதே
என் மனம்..

அப்பா என முதல்முறை அழைத்த நொடியும்..
தவழ்ந்து வந்து என் மடியை
சிம்மாசனமாய் ஆக்கி கொண்ட நேரங்களும்..
அவள் துயில் கொள்ள நான்
பள்ளியறையாய் மாறிய
இரவுகளும்..
என் கரம் பிடித்து 
கேள்விகணைகளால் என்னைத்
துளைத்தெடுத்து அவள்
நடைப்போட்ட சாலைகளும்
நீங்கா சிற்பமாய் 
என் நெஞ்சினுள்ளே..

சில பிரச்சனைகளில் சிக்கி
கண்ணீர் முட்டும் வேளைகளில்
பரிவோடு அவள் மடியில் சாய்த்து
என் தலையை தன்
பிஞ்சு கரங்களால் கோதிடும்போது
காண்கிறேன் அவளிடம்
என் அன்னையின் பிம்பத்தை..

குறும்பு கொப்பளிக்க அவள்
செய்யும் சேட்டைகளிலும்..
தினம் நடந்ததை என்னிடம்
அவள் ஒப்பிக்கையிலுமு
காண்கிறேன் அவளிடம்
என் தோழியின் பிம்பத்தை..

பிடிவாதம் பிடிக்கையிலும்
கோபப்படுகையிலும் 
காண்கிறேன் அவளிடம்
என் சுயத்தின் பிம்பத்தை..

என் மார்பில் சாய்ந்து தூங்க
என் குட்டிதேவதையும்,,
அவளைப் பெற்ற
என் தேவதையும்
இடும் செல்ல சண்டைகளில்
கரைந்து தான் போகின்றேன்..

என்ன தவம் செய்து
இவ்வரத்தைப் பெற்றேன்
என்று தெரியவில்லை..
எப்பாடுப்பட்டாவது தக்கவைத்துக்
கொள்வேன்
இவளின் சந்தோஷத்தை..
மனதில் தினமும் சுமந்து..

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.