(Reading time: 1 - 2 minutes)

பறவை மொழி - அதர்வ்

Bird

டாம், டாம், டப்

செவிகள் தகர்க்கும் ஒலி

 

கமம், கமம், கமம்

    (புறா எழுப்பும் ஒலிங்க

 

நான் பெற்ற வரத்தால்

இன்றும் பிழைத்துக் கொண்டேன்.

 

ஆனால், சில காலம்

ஆகாயம் பயணித்திருக்க தடா.

 

பக்... பக்... பா... பா

திக்.. திக் என்றது

 

தரையில் சிதறியிருக்கும்

   உணவைப் பார்த்து

 

அள்ளிச் செல்லவா?

 

விட்டுச் செல்லவா?

   தள்ளாட்டம் என்னுள். 

 

உணவா? உயிரா? ?

   அருகில் செல்லவும் முடியாமல்

   செல்லாமல் இருக்கவும் முடியாமல்

   பரிதவிப்புடன் நான்

 

உயிர் வளர்த்திட பசி போக்கவா?

உயிர் காத்திட விலகி நின்றிடவா?

உயிர் நெருடல்.

 

பசி !! வலியிலும் அள்ளிட முன் நடந்தேன்.

சிறகுகள் சுடப் பட்ட பறவை.

   இது என் வாழ்க்கை.

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.