(Reading time: 2 - 3 minutes)

கவிதை - முதல் கவிதை - அனிதா சங்கர்

Muthal kavithai

முதல் கவிதை

எதை எழுதுவேன் நான்

எனது முதல் கவிதையாய்

சுட்டெரிக்கும் சூரியனைப் பற்றியா

இல்லை இன்பம் தரும்

இளநிலவைப் பற்றியா

எதை எழுதுவேன் நான்

எனக்கு பிடித்த  நிறத்தையா

நான் விரும்பும் மலரையா

எதை பற்றி எழுதுவேன் நான்

எதை கருவாய் கொள்வேன்

எனது கவிதையில்

நான் அறிந்த உலகத்தையா

நான் அறியா உலகத்தையா

எதை உணர்த்தும் என் கவிதை

அனைவரயும் தன் பக்கம்ஈர்க்கும்

அன்பை உணர்த்துமோ

அனைவரும் தேடும் அமைதி

எது என்று கூறுமோ

எதை பற்றி  குறிப்பிடுவேன்

எனது கவிதையில்

எவராலும் மறக்க முடியாத

முதல் காதல் பற்றியா

யாரிடமும் இல்லாமல்

போகாத நட்பையா

எதை ஆளுவேன் கவிதை

என்னும் என் எழுத்தால்

என் தாய் மொழியின்

தனித்துவத்தை , அதன்

இலக்கண முறையாம்

எதுகை,மோனையை

எதை வலியுறுத்தும்

என் கவிதை

உலக மக்களின் அமைதியையா

உள்ளத்தின் அமைதியையா

எனது முதல் கவிதை

உயிரோட்டமுள்ள கவிதையாய் அமையுமோ

அன்பை வலியுறுத்துமோ அல்லது

அறவழி தவறுவதை வலியுறுத்துமோ

எவ்வாறு இருக்கும் எனது

முதல் கவிதை

எதை பற்றி எழுதுவேன்

என் முதல் படைப்பில்

சிறுபிள்ளையின் குறும்பை யா

தாயின் அன்பை யா

தந்தையின் கண்டிப்பை யா

உடன்பிறப்பின் நேசத்தை யா

இளைஞர்களின் துடிப்பை யா

வாழ்க்கை துணையின் காதலை யா

அந்த காதலின் மென்மையை யா

நட்பின் பெருமையை யா

இதில் எதை எழுதுவேன்

எதை எழுதுவது என்று

தெரியாமலே

இதோ எழுதிவிட்டேன்

எனது குழப்பங்களையே

முதல் கவிதையாய்....

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.