கவிதை - முதல் கவிதை - அனிதா சங்கர்
முதல் கவிதை
எதை எழுதுவேன் நான்
எனது முதல் கவிதையாய்
சுட்டெரிக்கும் சூரியனைப் பற்றியா
இல்லை இன்பம் தரும்
இளநிலவைப் பற்றியா
எதை எழுதுவேன் நான்
எனக்கு பிடித்த நிறத்தையா
நான் விரும்பும் மலரையா
எதை பற்றி எழுதுவேன் நான்
எதை கருவாய் கொள்வேன்
எனது கவிதையில்
நான் அறிந்த உலகத்தையா
நான் அறியா உலகத்தையா
எதை உணர்த்தும் என் கவிதை
அனைவரயும் தன் பக்கம்ஈர்க்கும்
அன்பை உணர்த்துமோ
அனைவரும் தேடும் அமைதி
எது என்று கூறுமோ
எதை பற்றி குறிப்பிடுவேன்
எனது கவிதையில்
எவராலும் மறக்க முடியாத
முதல் காதல் பற்றியா
யாரிடமும் இல்லாமல்
போகாத நட்பையா
எதை ஆளுவேன் கவிதை
என்னும் என் எழுத்தால்
என் தாய் மொழியின்
தனித்துவத்தை , அதன்
இலக்கண முறையாம்
எதுகை,மோனையை
எதை வலியுறுத்தும்
என் கவிதை
உலக மக்களின் அமைதியையா
உள்ளத்தின் அமைதியையா
எனது முதல் கவிதை
உயிரோட்டமுள்ள கவிதையாய் அமையுமோ
அன்பை வலியுறுத்துமோ அல்லது
அறவழி தவறுவதை வலியுறுத்துமோ
எவ்வாறு இருக்கும் எனது
முதல் கவிதை
எதை பற்றி எழுதுவேன்
என் முதல் படைப்பில்
சிறுபிள்ளையின் குறும்பை யா
தாயின் அன்பை யா
தந்தையின் கண்டிப்பை யா
உடன்பிறப்பின் நேசத்தை யா
இளைஞர்களின் துடிப்பை யா
வாழ்க்கை துணையின் காதலை யா
அந்த காதலின் மென்மையை யா
நட்பின் பெருமையை யா
இதில் எதை எழுதுவேன்
எதை எழுதுவது என்று
தெரியாமலே
இதோ எழுதிவிட்டேன்
எனது குழப்பங்களையே
முதல் கவிதையாய்....
{kunena_discuss:779}