(Reading time: 1 minute)

கவிதை - பயம் கொண்டேன்..!! - வசுமதி

Afraid

மனிதனாலல்ல அவன் மனதால்..

சீற்றத்தாலல்ல அமைதியால்..

விடையாலல்ல கேள்வியால்..

முடிவினாலல்ல காரணத்தால்..

பயம் கொண்டேன்..!!!

 

நிஜங்களாலல்ல கனவால்..

நிமிடங்கலாலல்ல நினைவுகளால்..

பொய்யாலல்ல மெய்யால்..

இறப்பாலல்ல வாழ்வினால்..

பயம் கொண்டேன்..!!!

 

இறுதியாலல்ல ஆரம்பத்தால்..

அந்நியராலல்ல அறியப்பட்டவரால்..

வெறுப்பாலல்ல அன்பால்..

உலகதாலல்ல என்னால்..

பயம் கொண்டேன்..!!!

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.