கவிதை - மனிதர்கள் பலவிதம் - சா செய்யது சுலைஹா நிதா
உரிமையுடன் பழகுவர் சிலர்
உரிமை இருந்தும் பழக மறுப்பவர் பலர்
நிமிடத்திற்கு ஒருமுறை தன் குணத்தை மாற்றுவோர் சிலர்
வருடங்கள் கடந்தும் மாறா குணமுடையோர் பலர்
மனதில் பட்டதை பேசுவோர் சிலர்
மனதில் பட்டாலும் பேச மறுப்பவர் பலர்
தன்னலம் கருதாமல் உதவுவர் சிலர்
தன்னலம் கருதி உதவ முன்வராதவர் பலர்
தன் பேச்சால் மற்றவரை குணப்படுத்துவர் சிலர்
அதே பேச்சால் மற்றவரை புண்படுத்துவர் பலர்
பிறரை அடக்கி வாழ்பவர் சிலர்
பிறரால் அடக்கப்பட்டு வாழ்பவர் பலர்
இதுபோல்,
மனிதர்களில் உண்டு பலவிதம்
அதை புரிந்துகொள்ள நமக்கு போதாது ஓர் யுகம்.
{kunena_discuss:779}