கவிதை - எழுந்து நில்... - தினேஷ் பாபு
கண்ணீரை மையாக்கி...
காகிதத்தை மடலாக்கி...
எண்ணத்தை எழுத்தாக்கி...
எழுதுகிறேன் உனக்காக,
இதை ஏற்றுக்கொள் உயிராக...
காலத்தை ஓர் நாள் இயற்கை வெல்லும் ..
அதுவே உன் வாழ்க்கை என்று சொல்லும் ..
பூமியை கேட்டு மழை பெய்வதில்லை,
ஆனால் அதை பூமி ஏற்க மறுப்பதில்லை...
வெற்றி உன்னை தேடி வருவதில்லை...
நீ முயன்றால் வெற்றி உன்னை வந்தடையாமல் இருப்பதில்லை.
சோதனையை கடந்தால் சாதனை அடைவாய் ...
சாதனையால் தலைகனம் கொண்டால் வேதனை அடைவாய்.,
துன்பத்தில் துவண்டு போகாதே,. பிறகு வாழ்க்கை இருண்டு போகும்..
நீ விழுந்தாலும் உன் கால்களே உன்னை தூக்கி நிறுத்தும் போது..
உன் முயற்சி மட்டும் அங்கேயே விழுந்திருப்பதில் அர்த்தமென்ன?..
எழுந்து நில் ...
தலையை தூக்கு...
கைகளை உதறி விட்டு.. களத்தில் இறங்கு நண்பா ...
{kunena_discuss:779}