கவிதை - அதிகாலைத் தூக்கம் - அஃப்ரா
அதிகாலை தூக்கம்
விடியலடிடம் விவாகரத்து வேண்டி
விணயமாய் நிற்கிறது
அம்மாவின் குரல்
அடிக்கடி அலாரம் விடுகிறது
விடைபெற வேண்டிய
கனவுகள் கூட
வரவேற்புரை கூறி
வருஷிக்கிறது
வண்ணப் பறவைகள்
எனக்காய்
தாலாட்டு இராகம்
இசைக்கிறது
அந்நாளின் அழகிய நிமிடங்கள்
என்னோடு ஒன்றித்து விட
உத்தரவு வேண்டுகிறது
வருமானத்தின் தேடல்களும்
வாழ்நாளின் கவலைகளும்
வழிந்தோடும் கண்ணீர் துளிகளும்
வருங்காலம் பற்றிய ஐயங்களும்
உனக்கு வேண்டாம் என்கிறது
குழந்தையாய் உருமாறி
என்னோடு உறவாகி
உறங்கிடு என்கிறது..!
{kunena_discuss:779}