(Reading time: 1 - 2 minutes)

கவிதை - முன்மாதிரி - ராஜேஸ்வரி 

Village

 பள்ளித்தோழியை 

 பலநாட்களுக்கு பின் 

 சந்தித்தேன்

 ஊர்த்திருவிழாவில் 

 

 இன்னும் குழந்தையாய்

  நான்

  இரு குழந்தைக்கு அம்மாவாய்

  அவள்

 

  பள்ளிநாட்களில் 

  நாங்கள் கலாய்த்த

  ஏதோ ஒரு

  கணவன் மனைவி போலவே

  அவள் கணவனை 

   அறிமுகப்படுத்திய நொடி....

. எனக்குள் 

  புன்னகை உதிர்தேன் 

  புரிந்து கொண்டாள் ...

 

 சிறிது நேரத்தில்

 தேர் வடம் பிடித்திழுப்பதை 

 பார்க்க தயாரானோம்....

 பொம்மை வேண்டுமென

 அடம்பிடித்து இழுத்தது 

  அவள் குழந்தை...

 

வீதிவீதியாய் சுற்றி

கடைகடையாய் ஏறி

சில அரியபொருள்களை

வாங்கி வந்த

குமரிக்கூட்டத்தின் எதிரே

குழந்தையோடும்

குமுறலோடும்வந்தாள்

பள்ளிதோழி ...

கடைசியாய் 

திருமணத்திற்கு முன் 

கேலியும் கிண்டலுமாய்

சுற்றியவீதி...

இப்பொழுதெல்லாம்

வடகொன்றும் ,தெக்கொன்றும்

 இழுக்கும் தலைவிதி  ...என

நொந்துகொண்டாள் .

  

சுற்றியுள்ள ஆரவாரங்களுக்கு

நாங்கள் அமைதியானோம்! 

எங்கள் எதிர்கால முன்மாதிரி

நடைபோட்டது அவள் உருவத்தில்!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.