(Reading time: 1 - 2 minutes)

கவிதை - தனி  மை  - ராஜேஸ்வரி

loneliness

சில அறிவுஜிவிகள் 

எதற்கும் உருப்படாதவள்

என ஒதுக்கிய போது

தனிமையிடம்

தஞ்சம் புகுந்ததேன்....

 

விலகிப்போனால்

விடுவார்களா...

 வார்த்தைகளை 

அள்ளி வீசி

காயப்படுத்தினார்கள் ...

அடைமொழி வைத்து

என் கண்ணில்

அடைமழை வரவழைத்தார்கள் ....  

 

கதவை மூடி 

காதை அடைத்தாலும்

எனக்குள்ளே சில குரல் ... 

 என் பிறந்தாய் என்கிறது  ...

உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள்

எடுக்க சொல்கிறது....

கடைசியாய் சொன்னது

உனக்குள் தூங்கி கொண்டிருக்கும் 

விதைக்கான உரம் 

என்றது ...

 

இப்போது 

எனக்குள்  ஊறிக்கொண்டிருக்கும்

தனி  மையிலே

எழுதிகிறேன் என்னை.. 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.