கவிதை - மருதாய்- உண்மையில் எனக்கு - ப.கலைச் செல்வி
தாலிக் கொடி
தொப்புள் கொடி
ஈருயிர்- ஓராண்டில்-மடிய
மருளாமல் -மருவா நேசத்துடன்
வைகறை துயிலெழுந்தாய்
வாடாமுகத்துடன் சமைத்தாய்
துவளாமல் தூண்(ஆ)ணாய்
என் விழி துடைத்து
வழித்துணை ஆனா(ணா)ய்
மருமகள் -என்
இளமைக்கு காவலானா(ணா)ய்
உயிர்ப்பை ஊக்குவவிக்கும்
என் அருமருந்தாய்
ஆனா(ணா)ய் -மருதாய்
{kunena_discuss:779}